தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புக்களை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வழங்கினார் .இவ்விழா தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். ஆ .மணி எம்.பி, எம்.எல்.ஏக்கள், ஜி.கே.
மணி, வெங்கடேஸ்வரன், திமுக மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி. பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் சார்பில் 98 கிராம ஊராட்சிகளுக்கு கலைஞரின் 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் .மேலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 10 பேருக்கு 63 லட்சம் மதிப்பீட்டில்சிறு வணிக கடன்களையும், வருவாய் துறை சார்பில் 52 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் என மொத்தம் 160 பேருக்கு 88
லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் காயத்ரி, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, நகராட்சி தலைவர் லட்சுமி , மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் சாந்தி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் மனோகரன், இன்பசேகரன் ,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மலர்விழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.