தென்தாமரைகுளம்,டிச.7-
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா நேற்று தொடங்கியது.
அய்யா வைகுண்ட சாமி எடுத்துரைத்த கருத்துகளை அவரின் சீடர்களில் ஒருவரான அரிகோபால சீசர் எழுதிய
அகிலத்திரட்டுஅம்மானை அய்யா வழி மக்களின் புனித நூலாக கருதப்படுகிறது.
ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய பக்தா்களுக்கு அகிலத்திரட்டு நூல் மூலம் கூறிய கருத்துகளை திருஏடாக வாசிப்பது வழக்கம். இந்த ஆண்டு திருஏடு வாசிப்பு
திருவிழா நேற்று 6 ம் தேதி தொடங்கியது.விழா தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.இதையொட்டி நேற்று 6-ம்தேதி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு திருநடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலை 4 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து 6 மணிக்கு திருஏடு வாசிப்பு தொடங்கியது.
சாமிதோப்பு தலைமைப்பதி தலைமை குரு பால பிரஜாபதி அடிகளார் விளக்கவுரையாற்றினார். பள்ளியறை ,வாகன பணிவிடைகளை குருமார்கள் பால ஜனாதிபதி, பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்ல வடிவு,ஜனா.யுகேந்த், ஜனா. வைகுந்த், நேமிரிஷ் செல்லா,அம்ரிஷ் செல்லா,கவுதம் செல்லா ஆகியோர் செய்திருந்தனர்.
பின்னர் இரவு 8:30 மணிக்கு வாகன பவனி நடைபெற்றது.விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பணிவிடை, மதியம் உச்சி படிப்பும், மாலையில் திருஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது.
15-ம் நாள் விழாவான வருகிற 20-ம் தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து அய்யா வைகுண்டசாமிக்கு பக்தர்கள் திருக்கல்யாண சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சியும், இனிமம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.17-ம் நாளான,22-ம் தேதிதிரு ஏடு வாசிப்பு, அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது.