கிருஷ்ணகிரி. டிச. 6. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய எட்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அது சமயம் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றிய அதிமுக கழகம் சார்பில், பர்கூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய உடன், அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றிய கழக செயலாளருமான சி.வி.ராஜேந்திரன் அவர்கள் ஏற்பாட்டின் கீழ் செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அசோக் குமார் கலந்துகொண்டு ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், ஒன்றிய கழக செயலாளர் ஜெயபால், மாவட்ட மாணவரணி செயலாளர் வெற்றிசெல்வம், எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மாதையன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இன்ஜினியர் கார்த்தி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-வது நினைவு தினம் அனுசரிப்பு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics