நாகர்கோவில் நவ 5
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 284-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலிகளும், 2024-ம் ஆண்டு அகில இந்திய தொழிற் தேர்வில் தமிழக அளவில் கடைசலர் பிரிவில் முதலாம் இடம் பிடித்த கோணம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் செல்வன்.எஸ்.அரவிந்த் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார் மீனா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு. தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சேக் அப்துல் காதர். நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, கூடுதல் உதவி காவல் கண்காணிப்பாளர் மதியழகன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.