கன்னியாகுமரி அக் 28
தீபாவளியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை சென்ட்ரல்-கன்னியாகுமரி, தாம்பரம்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 29 மற்றும் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06001), மறுநாள் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06002), மறுநாள் காலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் சென்னை எழும்பூரில் நிறுத்தப்படும். தாம்பரத்தில் இருந்து வரும் 29 மற்றும் நவம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் இரவு 12.35 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (060499), அதேநாள் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 29 மற்றும் நவம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் மாலை 3.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரெயில் (060509, மறுநாள் காலை 4.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.