வேலூர்=17
மரம் விழும்போது அருகில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது
வேலூர் மாநகரத்துக்குட்பட்ட வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கோட்டை சுற்று வளாகத்தில் உள்ள 30 அடி உயரம் பூ மரம் இன்று காலை 6 மணி அளவில் திடீர் எதிர்பாராத விதமாக சாலையில் அமைக்கப்பட்டிருந்த மீன் கம்பத்தின் மேல் விழுந்து மரமும் மின்கம்பமும் சேர்ந்து கோட்டை சுற்று சாலையில் உள்ள தள்ளுவண்டி கடை மேல் விழுது தள்ளுவண்டி மேல் விழுந்துள்ளது
அதன் பின் அருகே இருந்தவர்கள் அச்சமடைந்து மின் அலுவலகத்திற்கும், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்ததின் பெயரில் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டிக்கப்பட்டு, யாரேனும் உள்ளே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என சோதனை செய்து அதன் பின் யாரும் இல்லை என தெரியவந்தது.
பின்பு தீயணைப்பு வீரர்கள் மரம் அறுக்கும் இயந்திரத்தை வைத்து மரம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
எப்பொழுதுமே அதிக அளவு ஆள் நடமாட்டம் உள்ள பரபரப்பான சாலை ஆனால் இந்த பாதையில் யாரும் இல்லாத நேரத்தில் மரம் விழுந்ததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.