மயிலாடுதுறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மையே சேவை இயக்கம்-2024 முகாமில் 14 ஊராட்சிகளில் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நடைபெறும் மெகா தூய்மை இயக்கமான தூய்மையே சேவை திட்டத்தில் மயிலாடுதுறை தாலுகாவில் உள்ள மன்னம்பந்தல், சித்தர்காடு, ஆணைமேலகரம், குளிச்சாறு உள்ளிட்ட 14 ஊராட்சிகளில் பணியாற்றி வரும் 75-க்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் மயிலாடுதுறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இதில் மன்னம் பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், மருத்துவர் ரவிக்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் துப்புரவு பணியாளர்களுக்கு முழுஉடல் பரிசோதனை செய்து, தேவையான சிகிச்சைகளை அளித்தனர்.
தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics