சுப்ரீம் கோர்ட்டில் மனு சீராய்வு தாக்கல் செய்த திருமாவளவனுக்கு கண்டனம்
ஈரோடு செப் 13
பஞ்சாப் பட்டியலின இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து மாநில மாதிக தலைவர்கள் ஒருங்கிணைந்து அந்தந்த மாநிலங்களில் கோரிக்கை எழுப்ப வேண்டும் என இந்தியா மாதிகா செம்மார் கவுன்சில் மற்றும் தென்னிந்திய அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி கர்நாடக மாநிலம் பெங்களூரில் காந்தி பவனில் கர்நாடக மாதிகா கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கேசவமூர்த்தி தலைமையில் 52
அமைப்புகளின் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தப்பட்டது வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்நிகழ்வில் விடுதலை வேங்கைகள் கட்சி தலைவரும் தென்னிந்திய அருந்ததியர் கூட்டமைப்பு பொதுச்செயலரும் இந்தியா மாதிகா செம்மார் கவுன்சில் பொதுச்செயலருமான தமிழின்பன் மாதிக ரக்க்ஷன வேதிகா தலைவரும்
கவுன்சில் மற்றும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரகு ஸ்டீபன் பொருளாளர் கோபி மகாராஷ்டிரா மாருதி , சேபரத்,நிசா, கேரளாவின் கண்ணன் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் சமீபத்தில் பி.எஸ்.பி யிலிருந்து விலகிய முக்கிய பிரமுகர்களும் மற்றும் சிறப்பு அழைப்பாளராக நியமன எம்.பி எல்.என் மாத்தையாவும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்…
தனிப்பட்ட முறையில் தமிழின்பனுடன் எம் பி அவர்கள் பல்வேறு யுக்திகளை பற்றி கலந்தாலோசித்தார்.
கூட்டத்தில் கர்நாடகா மாதிகா கூட்டமைப்பு எழுச்சியுடன் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளக்கூடிய இட ஒதுக்கீடு மற்றும் அரசியல் அதிகார உரிமை மீட்பு கூட்டம் விரைவில் நடக்க உள்ளது .அருந்ததியர் உள் ஒதுக்கீடு உச்ச நீதிமன்ற தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டும் அதுவரை இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் தமிழின்பன் நன்றி கூறினார்