திருவள்ளூர் மாவட்டம் நகராட்சிக்கு சொந்தமான அரசு
சொத்துக்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள
இடங்களை மீட்கும் பணியில் மாவட்ட வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து செயல்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் என்ற என்ஜிஓ அமைப்பின் மூலமாக 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து வந்த சுமார் ஒரு கோடி மதிப்பிலான அரசு இடத்தை
வட்டாட்சியர் வாசுதேவன், தலைமையில் நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக கட்டிடங்களை இடிக்கப்பட்டு இடத்தை மீட்கப்பட்டனர்.
மேலும் நகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள் நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அதனை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என
வட்டாட்சியர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.