By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா
மாவட்டம்

சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா

தின தமிழ்
Last updated: August 30, 2024 1:07 pm
Published August 30, 2024
Share
SHARE

ஆக.30

 

திரளான பக்தர்கள் சாமிதரிசனம்

5 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

செட்டிபாளையம், தியாகிகுமரன் காலனி சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூர் பி.என்.ரோடு அண்ணாநகரை அடுத்த 4 செட்டிபாளையம், தியாகிகுமரன் காலனியில் சுடலை மகாராஜா, ராஜகாளியம்மன், முத்தாரம்மன், பேச்சியம்மன், பிரம்மசக்தி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் விழா கடந்த 23-ந்தேதி தொடங்கி, பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகளுடன் 1 வாரமாக விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு சுடலை மகாராஜாவுக்கு 3 மணி நேரம் சிறப்பு பூ அலங்காரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவில் தலைமை பூஜாரியும், பிரபல அருள்வாக்கு சித்தரும், சர்வசக்தி ஜனபேரவை நிறுவனத்தலைவருமான சுரேஷ் சுவாமிகள் தலைமையில் சுடலை மகாராஜா, சத்ராதி முண்டகசாமி, ராஜகாளியம்மன், முத்தாரம்மன், பேச்சியம்மன், பிரம்மசக்தி தெய்வங்களுக்கு படையல் பூஜை மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. இரவு 11 மணிக்கு மாசாண சுடலை ஈஸ்வரர் மயான வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியும், சுடலை மகாராஜா கொதிக்கும் சுடுநீரில் குளித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் விடிய, விடிய, காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமாக அசைவ உணவு வழங்கப்பட்டது. விழாவில் மும்மதத்தினர். கலந்து கொண்டது மதநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று அதிகாலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு ஏந்தி வந்து, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.  சேலஞ்சர் துரை, தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி. மு.நாகராசன், மண்டல தலைவர்கள் தம்பி கோவிந்தராஜ், உமாமகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம், 15-வது வார்டு கவுன்சிலர் சாந்தி பாலசுப்பிரமணியம், தி.மு.க. நிர்வாகி திராவிட பாலு உள்பட அரசியல் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சர்வசக்தி ஜன பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்று (வியாழக்கிழமை) மதியம் 11 மணிக்கு அம்மன் திருவீதி உலா வருதல் மற்றும் மஞ்சள் நீராடுதலுடன் பொங்கல் விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சொர்ணகுமார் தலைமையில் கோவில் கமிட்டி நிர்வாகிகள், சர்வசக்தி ஜன பேரவை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

You Might Also Like

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது துப்பாக்கி சூடு

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு காசோலை

ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திமுக சார்பில் நீர்மோர் ஜூஸ்

சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம்

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பெண்ணை வெட்டியவருக்கு 5 வருடம் சிறை

தின தமிழ் தின தமிழ் November 8, 2024
திற்பரப்பு அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
கோட்டார் காவல் நிலையத்தில் சரஸ்வதி பூஜை
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பீகாரை சேர்ந்த கட்டிட தொழிலாளி திடீர் மரணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?