ஈரோடு ஆக 23
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பல்வேறு அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
மாக்கினாம் கோம்பை பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில், கால்நடைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் மாக்கினாம் கோம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் சங்கத்தில் செயல்படும் இ-சேவை மையம் ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கடன் சங்கத்தில் வழங்கப்படும் வேளாண் கடன் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, இண்டியம்பாளையம் நியாயவிலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு, நியாய விலை பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும், நியாயவிலைக்கடையில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, அரசூர்புதூர் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மையத்திற்கு வருகைபுரியும் குழந்தைகளின் விபரங்கள் மற்றும் குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, உக்கரம் வட்டார அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் இண்டியம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, பிரசவ பிரிவு, தடுப்பூசி பிரிவு, உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட
பிரிவுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும், நாள்தோறும் சிகிச்சை மேற்கொள்ள வரும் நோயாளிகள் குறித்து கேட்டறிந்து, மருத்துவமனையில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகளின் காலாவதி நாள் ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் அரசினர் மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மாணவியர்களுக்கு வழங்க தயாராக இருந்த மதிய உணவினை ருசித்து பார்த்தார்.
தொடர்ந்து, சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட
அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சி தலைவர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
இந்தஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார்
கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஸ் கூட்டுறவு சங்கங்களின்
இணைப்பதிவாளர் ராஜ்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர்,
உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர்
ராம்குமார், சத்தியமங்கலம் வட்டாட்சியர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.