வேலூர்_16
உச்ச நீதிமன்றமும்
அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது ஆனால் கர்நாடகா அரசுதான் அதனை பின்பற்றவில்லை என அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி..
வேலூர் மாவட்டம்
காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டை பகுதியில் உள்ள நிதியுதவி தொடக்கப்பள்ளியில் 1 முதல்5 வகுப்பு பயிலும் 81 மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் விரிவு படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர்
துரைமுருகன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசி அமைச்சர் ,
பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு சத்தானதாகவும் சுவையானதாகவும் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு அதிக அளவில் வருவார்கள் என்பதால்
மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன்,
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஒரு டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டுமென காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் கர்நாடக அரசு
அதனை ஏற்காமல்
8000 கன அடி தண்ணீர் மட்டுமே தருவோம் என்று கூறுகிறார்கள்.
ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது 11,574 கன அடி தண்ணீர் ஆகும்
அதைக் கூட தர முடியாது என்று கர்நாடக அரசு கூறுகிறது.
தற்போது கர்நாடகாவில் கபினி அணையில் இருந்து அதிக அளவில் உபரி நீர் வந்து கொண்டிருக்கிறது.
கர்நாடகாவில் உள்ள ஹேமாவதி உள்ளிட்ட நான்கு அணைகளில் இருந்து தான் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும்,
ஆனால் கர்நாடக அரசு அதிலிருந்தும் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது.
இன்றளவில் மேட்டூர் அணைக்கு 4,047 கன அடி தான் தண்ணீர் வந்துள்ளது.
காவிரி பிரச்சினை குறித்து தமிழக முதலமைச்சரிடம் எடுத்து கூறியுள்ளேன்.
தற்பொழுது கர்நாடகாவில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது அதனால் அவர்கள் எந்த அளவிற்கு தண்ணீர் திறந்து விடுகிறார்கள் என்பதை பார்த்து,
முதலமைச்சருடன் பேசி ஆலோசனை செய்து அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதா?
அல்லது நானே கர்நாடக மாநிலத்திற்கு கடிதம் எழுதுவதா அல்லது காவிரி ஒழுங்காற்று குழு செயலாளரை சந்தித்து பேசுவதா ?
என்பதை இன்று முதலமைச்சருடன் பேசி ஆலோசனை செய்யப்படும்.
காவிரியில் இருந்து உபரி நீர் மட்டுமே வருகிறது ஆனால் உரிமை நீர் வருவதில்லை என செய்தியாளர்கள் கேட்டதற்கு,
உபரி நீரைத் தான் கர்நாடக அரசு உரிமை நீர் என்று சொல்கிறது.
காவிரி பிரச்சினையில்
நிரந்தர தீர்வு ஏற்பட
உச்ச நீதிமன்றம் இறுதி முடிவு செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்றமும்
அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து தான் வருகிறது ஆனால் கர்நாடகா அரசுதான் அதனை பின்பற்றவில்லை
என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
மேலும்
எடப்பாடி பழனிச்சாமிக்கு
காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக முழு தகவலும் தெரியாது.
அவர்கள் ஆட்சியில் இருந்தபோது மட்டும் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார்களா?
எனவே காவிரி தொடர்பான முழு தகவலும்
தனக்குத் தெரியும்.
அதனை அறிந்து
தான் செயல்பட வேண்டும்.
அதனுடைய நுணுக்கங்களை அறிந்து தான் செயல்பட வேண்டும் அப்படித்தான் நான் செய்து வருகிறேன்.
என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.