By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உணவு பாதுகாப்பு துறையின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > உணவு பாதுகாப்பு துறையின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது!!!
திருப்பூர்மாவட்டம்

உணவு பாதுகாப்பு துறையின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது!!!

தின தமிழ்
Last updated: July 17, 2024 12:21 pm
Published July 17, 2024
Share
SHARE

திருப்பூர் ஜூலை: 17

 

 தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த பான்மசாலா,குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மேற்படி விற்பனை செய்யும் கடைகள் மூடி சீலிடப்படுவதோடு கடும் அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது.

 

     தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் அவர்களின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.பா.விஜய லலிதாம்பிகை அவர்களின் தலைமையில் மாவட்டத்திலுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள், காவல்துறை காவலர்கள்  மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்ட சோதனையில்  தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா 

12கடைகளில் கண்டறியப்பட்டு மேற்படி 12 கடைகளுக்கு முதல் முறை குற்றத்திற்க்காக தலா ரூபாய் 25,000/- வீதம் ரூபாய் 3,00,000/- அபராதம் விதிக்கப்பட்டு மேற்படி 12 கடைகளும்மூடி சீலிடப்பட்டது. மேலும் கடந்த 15 நாட்களில் மேற்படி தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை விற்பனை செய்த குற்றத்திற்க்காக திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 63 கடைகள் அபராதம் விதிக்கப்பட்டு மூடிசீலிடப்பட்டுள்ளன.

 தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு ஹான்ஸ், குட்கா ,கூல்லிப், பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு முதல் முறையாக குட்கா விற்பனை செய்யும் குற்றத்திற்க்கு ரூ.25,000/- அபராதம் மற்றும் 15 நாட்கள் கடையை மூடி சீலிடுதல், இரண்டாம் முறை குற்றத்திற்க்காக ரூ.50,000/- அபராதம் விதிப்பதோடு 30 நாட்களுக்கு கடையை மூடி சீலிடும் நடவடிக்கையும். மற்றும் மூன்றாம் முறை குற்றத்திற்க்காக ரூ.1,00,000/- அபராதம் விதிக்கப்பட்டும், 90 நாட்களுக்கு கடையை மூடி சீலிட்டும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா ஹான்ஸ் போன்ற  நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் விற்பதை கண்டறிந்து முற்றிலும் ஒழிப்பதற்கு தொடர் நடவடிக்கை மாவட்ட முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது.

 

 மேலும் இந்நடவடிக்கையை தீவிர படுத்தும் பொருட்டு, மேற்படி தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் சேமித்து வைத்திருப்பது கண்டறியப்பட்டால் கடைகள் உணவு பாதுகாப்பு உரிமம்/பதிவு சான்று ரத்து செய்யப்படும். மேலும் உள்ளாட்சித் துறையில் வழங்கப்படும் ட்ரேடு லைசென்ஸ் ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாகும்.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இத்தகைய பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதை உடனடியாக

9444042322 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது

TN food safety consumer App என்ற செயலியில் பதிவேற்றம் செய்தோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். இவ்வாறு உணவு பாதுகாப்பு துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

கரும்பு நடவு வயல்களை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

அரசுப்பள்ளிகளில் ரூ.42.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை

வர விடுமுறை கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

47 மற்றும் 48 வது வார்டில் புதிய பெயர்பலகையை நேற்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
சிவகங்கைமாவட்டம்

ஸ்ரீ அழகு நாச்சியம்மன் திருக்கோயிலில் ஆடி மாதம் பௌர்ணமி பூஜை

தின தமிழ் தின தமிழ் July 23, 2024
பேரறிஞர் அண்ணாவின் 56- வது நினைவு நாள்
மழைநீர் வடிகால் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா
கோடைகால வெப்ப அலை பாதிப்பு விழிப்புணர்வு
அதிமுக 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?