By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை

தின தமிழ்
Last updated: July 5, 2024 1:29 pm
Published July 5, 2024
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 5 

 

கன்னியாகுமரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை மற்றும் மார்த்தாண்டம் பார்வதிபுரம் மேம்பாலங்களை சீர் செய்ய சிறப்பு நிதியாக 21 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டுமென டில்லியில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துதுறை அமைச்சர் 

நிதின் கட்கரியை  சந்தித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை மனு அளித்தார்.

 அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வரையில் தற்பொழுதுள்ள தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு பயன்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அன்றாட தேவைகளுக்கு இந்த சாலையை தினசரி பயன்படுத்தி வருகின்றனர். சிகிச்சைக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சரக்கு போக்குவரத்திற்கும் இந்த சாலை மட்டுமே உதவி வருகிறது. சமீப காலமாக இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. பொது மக்கள் இந்த சாலையில் பயணிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். சமீபத்தில் பெய்த கடும் மழை காரணமாக சாலை முற்றிலும் பழுதடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு  அதிகரித்துள்ளது. 

 

அது போன்று மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றது. சமீபத்தில் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஏற்பட்ட பள்ளம் இதற்கு அத்தாட்சி. ஆகவே இந்த இரண்டு பாலங்களும் பராமரிக்கப்பட வேண்டும். 

 

இந்த மேம்பாலங்கள் உள்பட களியக்காவிளை, படந்தாலுமூடு, குழித்துறை, மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதி, மணலி, குமாரபுரம், இடலாக்குடி, சுசீந்திரம் ஆகிய பகுதிகள் மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த இடங்களில் சாலைகளை புதுப்பிக்கவும், செப்பனிடவும் 21 கோடி ரூபாய் செலவாகும் என்பதை தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. ஆகவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டும், விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கவும் இந்த பணிகளுக்கு 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டு பெருவிழா

பக்தர்களுக்கு சிற்றுண்டி உணவு மற்றும் நீர் மோர் வழங்கல்

மக்கள் பயன்பாட்டிற்கு வராத தானியங்கி குடிநீர் நிலையம்!

வெளிநாட்டில் இறந்த 2 பேரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை

ஆதரவற்ற சடலங்களுக்கு அஞ்சலி செலுத்தி நல்லடக்கம்

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தென்காசிமாவட்டம்

இந்தித் திணிப்பு எதிர்ப்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி

தின தமிழ் தின தமிழ் February 25, 2025
சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி
தேயிலை பூங்காவை மேம்படுத்த
திருப்பரங்குன்றம் உண்டியல் திறப்பு
வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?