மதுரை ஜூலை 3,
மதுரை மாநகராட்சி மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ்குமார், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி திருத்தம் தொடர்பாக 29 மனுக்களும், சொத்துவரி பெயர்மாற்றம் தொடர்பாக 25 மனுக்களும், புதிய வரிவிதிப்பு வேண்டி 4 மனுக்களும், பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு தொடர்பாக 43 மனுக்களும், நகரமைப்பு தொடர்பாக 14 மனுக்களும், சுகாதாரம் தொடர்பாக 22 மனுக்களும், காலிமனை வரிவிதிப்பு வேண்டி 1 மனுவும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 8 மனுக்களும் என மொத்தம் 146 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மாண்புமிகு மேயர் அவர்களால் நேரடியாக பெறப்பட்டது. இம்முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் யாண்டிச்செல்வி, துணை ஆணையாளர் சரவணன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.