தஞ்சாவூர்.ஜூன் 22
தஞ்சாவூர்பெரிய கோவில் வளாகம் பெத்தண்ணன் கலையரங்கில் 1000 மாணவ மாணவியர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசு சுற்றுலா அமைச்சகம், தமிழக அரசு சுற்றுலா த்துறை மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் 1000 மாணவ மாணவிகள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுவான யோகா நெறி முறையின் படி யோகா பயிற்றுனர் . யோகானந்த வழிகாட்டுதலில் அனைவரும் 40 நிமிடங்கள் யோகா செய்தனர். டாக்டர் எம்.எஸ். சுவாமி நாதன் வேளாண் கல்லூரி, கிங்ஸ் பொறியியல் கல்லூரி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, அஞ்சலை அம்மாள் பொறியியல் கல்லூரி, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி, மன்னர் சரபோஜி கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி, குயின்ஸ் மகளிர் கல்லூரி, ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரி, பயோ கேர் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் யூத் ரெட்கிராஸ் சார்ந்த மாணவ, மாணவிகள் யோகா பயிற்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் . பாலகணேஷ், இந்திய சுற்றுலா தென் மண்டல உதவி இயக்குனர் த வேல்முருகன் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
நிகழ்வில் மாநகர நல அலுவலர் டாக்டர். சுபாஷ் காந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மாவட்ட சுற்றுலா அலுவலர் . சங்கர், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர். முத்துக்குமார், இந்திய சுற்றுலா சென்னை அலுவலகத்தைச் சார்ந்த சுற்றுலா தகவல் அலுவலர்கள் . ராஜ்குமார், கோபிநாத், லலிதா குமாரி,நிக்சன், ஹரிபாபு, . மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்