கன்னியாகுமரி ஜூலை 21
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் முன்னோர்களுக்கு தற்பனம் அளிக்கும் விதமாகவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்கு நிகழ்வாகவும் ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான ஆடி முதல் நாள் முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு வாவுபலி பொருட்காட்சி விமர்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் ஆடி பெருக்கினையொட்டி நடைபெறும் 99-வது வாவுபலி பொருட்காட்சி துவக்க நிகழ்வானது குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான வி.எல்.சி மண்டபத்தில் கடந்த 18-ம் தேதி துவங்கியது. இந்நிகழ்ச்சியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும்
வளர்ச்சித்திட்டங்களை அறிவித்து அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்களான. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது. சாலை, போருந்து, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்டங்கள். இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம். கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம். மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது. முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம். புதுமைப்பெண் திட்டம் குறித்தும், ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர். உங்களைத்தேடி உங்கள் ஊரில், பள்ளி மாணவியர்களுக்கு விலையில்லா மதிவண்டி வழங்கும் திட்டம். நீங்கள் நலாமா திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்ட புகைப்படங்கள்
மற்றும் பல்வேறு துறைகளில் பணியின்போது காலமானவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன
ஆணை வழங்கியது ஆகியவை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட செய்தி
மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள்
பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டு பயன்பெற்றார்கள்.