தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் நீடித்த நிலத்தடி நீர் செறிவூட்டல் கட்டமைப்பை ஏற்படுத்த ரூபாய் 3,500 கோடியில் திட்டம்.
மத்திய நிலத்தடி நீர் வாரிய தென்கிழக்கு கடலோர மண்டல இயக்குனர் தகவல்
தஞ்சாவூர் பிப்.10.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் மத்திய ஜல் சக்தி அமைச்ச கம், பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் நடைபெற்ற நீடித்த நிலத்தடி நீர் செறிவூட்டல் கட்டமைப்பை ஏற்படுத்த ரூபாய் 3,500 கோடியில் திட்டம் தயார் செய்யபடுகிறது என மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் தென்கிழக்கு கடலோர மண்டல இயக்குனர் சிவக்குமார் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது
கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான நிலத்தடி நீர் வகைப்படுத்துதல் பணியில் அகில இந்திய அளவில் நிலத்தடி நீர் 60 சதவீதம் பாதுகாப்பான நிலையில் உள்ளது தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் 30 சதவீதம் பாதுகாப்பான நிலையில் இருக்கிறது .மீதமுள்ள 70சதவீதம் பகுதிகளில் பாதி நெருக்கடி நிலையிலும், முழு நெருக்கடி நிலையிலும், அதிக அளவிலான சுரண்டல் நிலையிலும் உள்ளன இந்நிலைமை 246 வட்டாரங்களில் நிலவுகிறது.
எந்த மாநிலம் தொழிலிலும், வேளாண்மையிலும் முன்னோடி யாக இருக்கிறதோ அங்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இங்கு நிலத்தடி நீர் அதிக அளவில் சுரண்டப்படு கிறது என்றால், தமிழ்நாடு முன்னேறி வருகிறது என்பதுதான் அர்த்தமே தவிர, அதற்காக அச்சப்பட வேண்டியதில்லை. இந்த வளர்ச்சி நீடிக்க தண்ணீர் பயன் பாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் நீர் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் இதற்காக தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மத்திய அரசு ஒருங்கிணைந்த நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டத்தை செயல் படுத்தி வருகிறது .இதை வெற்றி கரமாக செயல்படுத்தினால் வளமான தமிழ்நாட்டை உருவாக்க முடியும் .தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் செறியூற்றல் கட்டமைப்பை ஏற்படுத்த ரூபாய் 3,500 கோடியில் பெருந்திட்டத்தை மத்திய நிலத்தடி நீர் வாரியம் தயாரித்து வருகிறது நிலத்தடி நீரில் கடல் நீர் உட்புகுத லை தடுக்க ஆழ்குழாயில் தானியங்கி நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது .இதன் மூலம் நிலத்தடிநீரில் உவர்நீர் இருப்பதை அறிந்து முன்னெச்சரி க்கை நடவடிக்கை மேற்கொள்ள முடிகிறது .தமிழ்நாட்டு தற்போது 1,000 இடங்களில் கருவி அமைக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடலிருந்து 5 கி.மீ தொலைவுக்கு நிலத்தடி நீரில் கடல் நீர் உட்புகுந்துள்ளது .இதை தடுக்க 100 மீட்டர் ஆழத்திற்குள் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுக்க வேண்டாம் என்றும், 100 மீட்டருக்கும் அதிகமான ஆழத்திற்கு சென்று தண்ணீர் எடுக்குமாறும் அறிவுறுத் தப்படுகிறது என்றார். சிவக்குமார்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் துணை வேந்தர் (பொ) சங்கர் பதிவாளர் (பொ) பன்னீர்செல்வம் ஆட்சி குழு உறுப்பினர் பாரத ஜோதி, தொழில் மற்றும் நில அறிவியல் துறை தலைவர் நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.