கிருஷ்ணகிரி: செப்:30:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ஊடேதுர்க்கம் ஊராட்சி, திம்ஜேப்பள்ளியில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 2 வது நாளாக நடைபெற்று வரும் தீயணைப்பு, மீட்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தேசிய நலவாழ்வு குழும மேலாண்மை இயக்குநர் .ஷில்பா பிரபாகர் சதீஷ் . அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு .. ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தேசிய நலவாழ்வு குழும மேலாண்மை இயக்குநர் .ஷில்பா பிரபாகர் சதீஷ் . அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ஊடேதுர்க்கம் ஊராட்சி, திம்ஜேப்பள்ளியில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (28.09.2024) அன்று தீ விபத்து ஏற்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, டாடா எலக்ட்ரானிக் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் தீயணைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டோம். மேலும் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக தீயணைப்பு பணிகள் நடைபெற்று தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. டாடா எலக்ட்ரானிக் நிறுவனத்தில் 27.09.2024 அன்று இரவு பணியில் 523 பணியாளர்கள் பணியில் இருந்த நிலையில் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வார்டில் உள்ளனர். இருவர் தீவிர சிகிச்சை உள்ளனர். மூச்சு திணறல் ஏற்பட்டு ஓசூர் காவேரி 11 நபர்களில் 9 நபர்கள் சாதாரண பிரிவில் நல்ல முன்னேற்றத்துடன்
தீ விபத்து ஏற்பட்ட தகவல் தெரிந்தவுடன் மாவட்ட நிர்வாகம் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களுர் மற்றும் ஒசூரில் இயங்கி வரும் பெரு நிறுவனங்களின் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்விபத்து நடந்து 3 ½ மணி நேரத்திற்குள் தீ பரவல் கட்டுக்குள் வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டாலும் வெப்பநிலை குறையவில்லை. இவ்விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் மற்றும் ஏற்பட்டுள்ள சேதாரம் குறித்து விபரங்கள் பின்னர் தெரியவரும்.
சுகாதாரத்துறை சார்பாக 2 ஆம்புலன்ஸ், டாடா நிறுவனம் சார்பில் காவேரி
மருத்துவமனை ஆம்புலன்ஸ் 1 தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில்
ஈடுபடும் நபர்களுக்களுக்கு மயக்கம், கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்றஅறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்து பொருட்கள், ஆக்ஸிசன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுடன் 3 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. சுற்றுபுற கிராமங்களில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள், இரத்த அலுத்தம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய நடமாடும் மருத்துவ குழு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. கெலமங்கலம், உத்தனப்பள்ளி, ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையில் படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளனர். ஓசூர் அரசு தலைமை மருத்துவமனை, ஓசூர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தலா 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் நமது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் அவசர கட்டுப்பாட்டு அறை மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 04343- 234444 அமைக்கப்பட்டு, ஒவ்வொரு பணியாளர்களையும் தொடர்பு கொண்டு, அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உதவி வழங்கப்படும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தேசிய நலவாழ்வு குழும மேலாண்மை இயக்குநர் .ஷில்பா பிரபாகர் சதீஷ் . அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா , நலப்பணிகள் இணை இயக்குநர் (பொ) மரு. ஞானமீனாட்சி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.ரமேஷ்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் .ம.வேலு, ஓசூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் மரு.வி.பிரபாகர், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராஜேஷ், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் .கோகுல்நாத், வருவாய் ஆய்வாளர் .முனிராஜ், மற்றும் காவல் துறை அலுவலர்கள், துறை சார்ந்த
அலுவலர்கள் உடன் இருந்தனர்.