தருமபுரி மாவட்ட செங்குந்த மகாசன சங்கத்தின் 29 -ஆம் ஆண்டை முன்னிட்டு 10, 12 ஆம் வகுப்பில் 75 சதவிகிதம் மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்க பரிசு ம் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி பதங்கள் மற்றும் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார். இவ்விழாவை மாநில தலைவர் செல்வராஜ் சங்கத்தின் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினர். மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் ஊக்க தொகையை வழங்கினார். இதில் மாநில பொதுச் செயலாளர் குமரகுருபரன், மாநில பொருளாளர் காந்தி, மாவட்டத் தலைவர் சந்தோஷ், மாவட்ட பொதுச் செயலாளர் சச்சிதானந்தம், மாவட்ட பொருளாளர் திருநாவுக்கரசு, சேலம் மாவட்ட தலைவர் வள்ளல் சடையப்ப முதலியார் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
செங்குந்த மகாசன சங்கத்தின் 29 -ஆம் ஆண்டை

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics