புதுக்கடை, மார்- 17
தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (61). இவர் நேற்று புதுக்கடை சந்திப்பு பகுதியில் சாக்கு பையை கையில் ஏந்திய படி நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்தனர்.
விசரித்த போது அதிக விலைக்கு விற்பதற்காக மது பாட்டில்கள் பையில் வாங்கி வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை காவல் நிலையம் கொண்டு சென்று சோதனையிட்ட போது, பையில் 26 மது பாட்டில்கள் காணப்பட்டது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து தேவராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்