By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2500 கிலோ ரேசன் அரிசி 2000லிட்டர் மண்ணைண்ணைய் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 2500 கிலோ ரேசன் அரிசி 2000லிட்டர் மண்ணைண்ணைய் பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

2500 கிலோ ரேசன் அரிசி 2000லிட்டர் மண்ணைண்ணைய் பறிமுதல்

தின தமிழ்
Last updated: February 27, 2025 8:59 am
Published February 27, 2025
Share
SHARE

 நாகர்கோவில் பிப் 26

 

கன்னியாகுமரி  மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நடந்த வாகனச் சோதனைகளில் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்ற ரேசன் அரிசி மற்றும் மண்ணைண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்த விபரம் வருமாறு.

       நேற்று முன்தினம் இரவு தனி வட்டாட்சியர் அனிதா குமாரி தலைமையில் தனி வருவாய் ஆய்வாளருடன் இணைந்து  விளவங்கோடு வட்டம் அருமனை குஞ்சாலுவிளை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த சுமோ வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தபோது இருக்கைகளை மாற்றி ரகசிய அறைகள் அமைத்து நூதன முறையில் 1500 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வாகனத்தை ஒட்டி வந்த ஓட்டுனர் வாகனதை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது போல் நேற்று நள்ளிரவு தனி வட்டாட்சியர் பறக்கும் படை (பொ) அனிதாகுமாரி தலைமையில் . துணை வட்டாட்சியர் பறக்கும் படை (பொ) சுனில்குமார், தனி வருவாய் ஆய்வாளர் மற்றும் ஒட்டுனர் சுரேஷ் ஆகியோர் வில்லுக்குறி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த கேரள பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்றினை சந்தேகத்தின் பேரில் நிறுத்த முற்பட்ட போது நிறுத்தாமல் சென்றுள்ளது. அந்த வாகனத்தை பின்னால் தூரத்தி சென்று தக்கலை அரசு மருத்துவமனை அருகே  வைத்து வழிமறித்த போது காரை நிறுத்தி விட்டு ஒட்டுனர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் வாகனத்தை சோதனை செய்த போது  வாகனத்தின் பின்பக்கம் சுமார் 1000 கிலோ ரேசன் அரிசி கண்டெடுக்கப்பட்டது.

அது போல் நேற்று அதிகாலை மணவாளக்குறிச்சி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த கேரள பதிவு எண் கொண்ட பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்ட போது அந்த வாகனத்தை ஓட்டுனர் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். பின்னர் வாகனத்தை சோதனை செய்த போது. 50 கேன்களில் சுமார் 2000 லிட்டர் மீனவர்களின் படகுகளுக்கு பயன்படுத்தப்படும் மானிய விலை வெள்ளை நிற மண்ணைண்ணெய் தார்பாய் போட்டு மறைத்து வைக்கப்படிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்படி மூன்று சம்பவங்களில் கண்டுபிடிக்க பட்ட ரேசன் அரிசி மற்றும் மண்ணெண்ணை ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை காப்பு காடு அரசு உணவு கிட்டங்கி மற்றும் மண்ணெண்ணெய் குடோனில் ஒப்படைக்கப்பட்டது. வாகனங்களை மேல் நடவடிக்கைக்காக விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடத்தியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கடத்தல் வாகனத்தை கண்டுபிடித்த தனி வட்டாட்சியர் அனிதா குமாரி, துணை வட்டாட்சியர் பறக்கும் படை சுனில் குமார் ஆகியோரை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டினார்கள்

You Might Also Like

தின தமிழ் இல்ல திருமண விழாவிற்கு அழைப்பு

வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா

தருமபுரி நகர திமுக சார்பில் சாதனை விளக்க பொது கூட்டம்

திமுக சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்

+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு M.P. சாதிக் வாழ்த்து

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்க கூட்டம்

தின தமிழ் தின தமிழ் October 1, 2024
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விழிப்புணர்வு
ஆண்டார்குளம் அருகாமையில் ஓணம் பண்டிகை
நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
புற்றுநோய் பரிசோதனை மையத்தின் பிரமாண்ட தொடக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?