தஞ்சாவூர். டிச.18.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 1 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டை பட்டா மாற்றம் கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 520 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சத்தலைவரிடம் வழங்கினார் கள்
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு அதன் விபரத்தை மனுதாரருக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 6 பேருரின் குடும்ப உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய்1 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தியாகராஜன் ,பயிற்சி உதவி ஆட்சியர் உத்கர்ஷ் குமார் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆட்சியர் சங்கர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.