விருதுநகர் மாவட்டம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பாக பாண்டியன் நகரில் மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நீர் மோர் பந்தலை துவக்கி வைத்தார். அதன் பின்னர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் தர்மலிங்கம் தலைமையில் மினரல் வாட்டர் மோர் சர்பத் வெள்ளரிக்ககாய் இளநீர் வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்வின் போது இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் சிவக்குமார் எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய துணைச் செயலாளர் நந்தகுமார்
ரெங்கநாதபுரம் கிளை செயலாளர் சரவணராஜ் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி ஒன்றிய செயலாளர் மதன்ராஜ் மற்றும் ஒன்றிய அவைத் தலைவர் உட்பட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.