மதுரை மே 7
மதுரை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 16,176 மாணவர்கள் மற்றும் 17,508 மாணவியர்கள் என மொத்தம் 33,684 பேர் தேர்வு எழுதிய நிலையில் 15,015 மாணவர்கள் மற்றும் 17,049 மாணவிகள் என மொத்தம் 32,064 பேர் மாவட்ட அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 95.19 தேர்ச்சி பெற்றனர். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 10,309 மாணவ மாணவிகள் தேர்வு எழுதி உள்ளார்கள் அதில் 9,435 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் 324 பள்ளிகளில் 134 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து உள்ளனர். அதில் 25 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 2,194 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று உள்ளார்கள். இதில் 100 சதவீதம் விழுக்காடு பெற்ற பள்ளிகள் ஆதிதிராவிட மேல்நிலை பள்ளிகள் 2, மதுரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி 2, அரசு மேல்நிலைப் பள்ளிகள் 10, கள்ளர் மேல்நிலைப் பள்ளிகள் 11, மதுரை மாவட்டத்தில் மொத்தம் 25 பள்ளியில் 100 விழுக்காடு தேர்ச்சிபெற்ற பள்ளிகள். மேலும் மதுரை மத்திய சிறையில் பிளஸ் டூ தேர்வு எழுதிய 15 சிறைவாசிகளும் தேர்ச்சி பெற்றனர். இதில் 536 மதிப்பெண் பெற்ற சிறைவாசி ஆரோக்கிய ஜெய பிரபாகரன் முதலிடம் பிடித்தார். 532 மற்றும் 506 மதிப்பெண்கள் பெற்ற அலெக்ஸ் பாண்டியன் மற்றும் அருண் குமார் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்றனர். தேர்வில் வெற்றி பெற்ற சிறைவாசிகளை சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் உடன் உள்ள சிறைவாசிகள் அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.