கன்னியாகுமரி மே 13
குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையும் அதனை சார்ந்த பகுதிகளிலும் மழை பெய்தது – மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணி அணை பகுதியில் 48.06 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர் – கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக மேற்கு தொடர்ச்சி மலையும் அதனை சார்ந்த கிராம பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது ஆனால் நாகர்கோவில் போன்ற நகர் பகுதியில் வெயிலின் தாக்கம் குறையவில்லை இந்நிலையில் நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சார்ந்த பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணி அணை பகுதியில் 48.06 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று புத்தன் அணை பகுதியில் 46.02 மில்லி மீட்டர் மழையும் சிற்றார் – 2, அனை பகுதியில் 28.04 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது – பேச்சிப்பாறை அனைக்கு இந்த கோடையிலும் வினாடிக்கு 246 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. 42 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அனை யினுடைய நீர்மட்டம் 44.34 அடியாக உயர்ந்துள்ளது – 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையினுடைய நீர்மட்டம் 47.03 அடியாக உயர்ந்துள்ளது அனைக்கு வினாடிக்கு 204 கண்ணாடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது மேற்கு தொடர்ச்சி மலை அதனை சார்ந்த கிராமங்களில் பெய்து வரும் இந்த மழையினால் வெயிலில் தாக்கத்திலிருந்து விடுபட்டு மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics