இந்தியா முழுவதும் புதிய முப்பெரும் சட்டங்கள் வருகின்ற 01.07.2024 முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்து பயிற்சியளிக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.